Saturday, October 31, 2015

அழுகுணிச் சித்தரும், கவியரசரும்!



வேதாந்தம், வைத்தியம், யோகம், ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளவர் அழுகண் சித்தர். அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய இரண்டு நூல்கள் படைத்தவர்.  அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கப் பெற்றவர்.

    இந்தச் சித்தர்தான்  ஊரைப் பார்த்து , உலகையும் பார்த்து , தன்னையேப் பார்த்தும்  இப்படி அழுதாராம்.

     பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து   
   மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்  
    மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்   
   பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.          
    - பாழாய் முடியாதோ.


நம்ம கவியரசர் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா ?



 திரைப்படம்: காட்டு ரோஜா
 பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
 இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
 இசை: கே.வி. மகாதேவன்
ஆண்டு: 1963


எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! 
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

https://youtu.be/D22gJStL37I

No comments:

Post a Comment