Sunday, November 26, 2017

ஆன்மா அழிவதில்லை!

இறந்தவர்களின் ஆன்மா அழிவதில்லை. பிரபஞ்சத்திற்கு மீண்டும் வருகின்றது, என்ற ஆச்சரியமான தகவலை அமெரிக்க இயற்பியலாளர்கள் இருவர் கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். இதைத்தானே நம் இந்து மதமும், சித்தர்களும் தொன்றுதொட்டு சொல்லி வருகிறார்கள். மிகவும் தாமதமான கண்டுபிடிப்பு!
மனித மூளை ஒரு "உயிரியல் கணினி" போலவே செயல்படுவது போல, மனித உணர்வு மூளையில் ஒரு குவியக்கொள்கை கணினி மூலம் இயங்கும் திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள். நுண்ணிய குழாய்களில் மூளை செல்களால் ஆன்மா பராமரிக்கப்படுகிறதாம்."மருத்துவ ரீதியாக இறந்தவர்கள்" என கருதப்படும்போது மூளையில் உள்ள நுண்ணுயிரிகள் தங்கள் குவாண்டம் நிலைமையை இழந்துவிடுகின்றன, ஆனாலும் பதிவான தகவல்கள் அழிவதில்லை. அவை அப்படியே பிரபஞ்சத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டு சிதைகிறது.
உயிர் போனவுடன் இதயம் அழுகிப்போகும், இரத்த ஓட்டம் நிறுத்தப்படும் என்று சொல்லலாம்; நோயாளி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால், புத்துயிர் பெற்றால்,நுண்ணுயிரிகளில் இந்த குவாண்டம் தகவல் மீண்டும் செல்லும்போது ' மரணத்தை அருகில் பார்த்த அனுபவம் உண்டு' என்று கூறுவார். நோயாளி இறந்துவிட்டால், இந்த குவாண்டம் தகவல் உடலின் வெளியே, காலவரையின்றி, ஒரு ஆத்மாவாக உலவ முடியும்.
இந்த "ஆன்மாக்கள்" காலச்சக்கரத்தின் ஆரம்பம் முதலே இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் மனிதர்களால் பார்க்க முடியாத அல்லது கையாள முடியாத இருண்ட எரிசக்தியும் இருண்ட பொருட்கள் இருக்கின்றன. இந்த கோட்பாடு மேலும் மர்மமான, கவர்ச்சிகரமான பல விசயங்களுக்கு விடையளிக்கும் என்று நம்புவோம்.. எது எப்படியோ மக்கள் பாவ புண்ணியத்திற்கு கொஞ்சம் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது என்பது சத்தியம்!

No comments:

Post a Comment