Friday, November 13, 2020

தீபாவளி வாழ்த்துகள்!

 

 

 

நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்கள்  Disease Control and Prevention (CDC) சமீபத்தில் மாஸ்க் என்ற முகமூடிகளின் பயன்பாடு குறித்த அறிக்கையை புதுப்பித்துள்ளது. கொரோனா வைரசு நோய்த்தொற்றுடையர் வைரசு நிறைந்த நீர்த்துளிகளை வெளியேற்றுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களால் நோய்த்தொற்று நீர்த்துளிகள் உள்ளிழுக்கப்படுவதைக் குறைக்கின்றன என்று கூறுகிறது. பல நாடுகள் பொது இடங்களில் துணியாலான முகம் உறைகளை அணிய பரிந்துரைக்கின்றன, குறிப்பாக கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமாம். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுவாசிக்கும்போது, ​​இருமல் அல்லது தும்மும்போது வைரசுடன் நீர்த்துளிகள் காற்றில் நுழைவதைத் தடுப்பதன் மூலம் கொரோனா வைரசு  பரவலை இந்த முகமூடிகள் குறைக்கின்றன. முக்கியமாக, வைரஸ் உள்ளவர்களாக இருந்தும், எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் அல்லது இதுவரை அறிகுறிகளைக் காட்டத் தொடங்காதவர்கள் விசயத்தில் முகமூடி மிகவும் முக்கியமானது. இந்த வைரசு இதுவரை 52.1 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களையும் 1.2 மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, உருசியாவின் இசுபூட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியின் முதல் கட்ட 3 சோதனை 92% செயல்திறனைக் காட்டியுள்ளதாக அறிவித்தது மகிழ்ச்சியான செய்தி. விரைவில் இது புழக்கத்திற்கு வரும் என்று நம்புவோம் என்றாலும், சான்றுகள் முகமூடிகள் அணிந்தவரை நோயிலிருந்து பாதுகாப்பு உறுதி என்பதைக் காட்டுகிறது. தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடி மகிழுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்களே.

 

 

Thursday, November 5, 2020

மாலை மலர் - 34

 








மாலை மலர் - 33










 

இதயம் பேசும் சொற்கள் .....

 

மனிதர்கள் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ பொய்யும், நடிப்புமான வார்த்தைகளை உதிர்த்தாலும் உயிர் பிரியும் நேரத்தில் கட்டாயம் உண்மையைத் தான் பேசுவார்கள் .. அவை இதயம் பேசும் சொற்கள் .. நாம் இறுதியாக  என்ன வார்த்தை பேசப்போகிறோம் என்று யாருக்குமே தெரியாது ..   ஆனாலும் எல்லா பாவங்களையும் செய்தாலும் தான் நல்லவராக எண்ணிக்கொள்வதே மனித மனம் .. என்றாலும் இயற்கையின் கணக்கிலிருந்து தப்ப முடியாதே ..சில பிரபலங்கள் உயிர் விடுவதற்கு முன்னர் இறுதியாக உதிர்த்த வார்த்தைகள் இதோ …

 

ஜூலியசு சீசர் – துரோகம் செய்த நண்பனைப் பார்த்து யூ டூ புரூடஸ்?’ என்றார்

 

பெருந்தலைவர் காமராஜர் – தமது உதவியாளரிடம், ”வைரவா விளக்கை அனைத்து விடு”

 

தாமஸ் ஆல்வா எடிசன் - “விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் போது வெளிச்சம் இருக்கட்டும்”.

 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பூட்டோ - “இறைவா … நான் ஒரு குற்றமும் செய்யாதவன்”.

 

உலக அழகி டயானா - “கடவுளே என்ன நடந்தது எனக்கு?”

 

கிளியோபாட்ரா - தனது கையில் பூ நாகத்தை பிடித்துக் கொண்டுஆஹா… இதோ… என் முடிவு இங் கே இருக்கிறது” என்றார்.

பீத்தோவன் - நண்பர்களே கை தட்டுங்கள் … இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப் போகிறது”

மேரி க்யூரி  - “என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.”

பாபர் - ”இந்தியாவி ல் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே”

வின்ஸ்டன் சர்ச்சில் – 9 நாட்கள் கோமாவில் இருந்து உயிர் விட்டவர், கோமாவிற்கு செல்லும் முன் இறுதியாகச் சொன்னது, “எனக்கு எல்லாமே போர் அடிக்குது” 

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...