Friday, December 10, 2021

"பசிப்பிணி அற்றதே நாடு" திருவள்ளுவரும் மணிமேகலையும் | பாகம் - 2 | திருக்...

"பசிப்பிணி அற்றதே நாடு" திருவள்ளுவரும் மணிமேகலையும் | பாகம் - 1 | திருக்...

என் மொழிகள்


 

என் மொழிகள்


 

கல்விக்கோ விஐடி வேந்தர் ஐயாவிற்கு அகவைத் திருநாள் வாழ்த்துகள்!

 

வாழ்நாள் சாதனையாளருக்கு வளமான அகமகிழும் அகவைத் திருநாள் நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் அன்பு ஐயா!!

 

கல்விக்கோ விஐடி வேந்தர் ஐயாவிற்கு அகவைத் திருநாள் வாழ்த்துகள்!

எப்படியும் வாழலாமென்பது சாமான்யனின் கணக்கு

இப்படித்தான் வாழவேண்டுமென்பது வல்லவனின் கணக்கு

புல்லும் ஆயுதமாய் கல்லும் காவலரணாய்

சொல்லும் வேதமாய் திக்கெட்டும் சாதனையாய்

சகலமும் மனிதமாய் எண்ணமும் எழுத்தும்

சர்வமும் தமிழுக்காய் வாழ்வெலாம் வண்ணமாய்

எளிமையே இயல்பாய் உறவுகளெலாம் விருட்சமாய்

விடியலின் வேர்களாய் விண்ணின் மேகங்களாய்

மண்ணில் விழுதுகளாய் மனமெனும் கோயிலில்

நல்லவை நிறையவும் அல்லவை விலகியோடவும்

தரணியெலாம் பரவுபுகழ் தஞ்சமென தனையுயர்த்தவும்

இனிவரும் காலங்கெலாமும் இன்னமுதாய் இன்னிசையாய்

துன்பமில்லா துயரில்லா இன்பநிறை பொழுதுகளுடன்

பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு

வாழ்வாங்கு வாழ்ந்து வள்ளன்மையுடன் வலம்வர

சர்வவல்லமையாளன் சர்வேசுவரனை தாள்பணிந்து வணங்குவாம்!!

#பவளா

 


பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...