Saturday, June 25, 2011

முதுமை நம்பிக்கை!


கடினமான கற்பாறையும் இணையாகுமா?
நளினமான பசுந்தளிரும் இணையாகுமா?
பகட்டான பாசியும் இணையாகுமா?
வறண்ட பூமியும் இணையாகுமா?
பாறையைத் தாண்டிய பாலைவனமும்
இணையாகுமா அன்னையேயுன் மன உறுதியின் முன்!
வழியில் கிடந்து சிரிக்கும் வண்ணமலரே
வாழும் வகையறியாயோ மென்மலரே
காலம் உனக்கும் நலல நண்பன்
பாழும் உலகில் மிதிபடாமல் அன்புகாட்டி
நாளும் உனைக் காக்க நல்லோர் பலரிருக்க
வீழும் அச்சம் உனக்கின்றி அமைதியாய்
வண்ணமும் நல் எண்ணமும் மேலோங்க
மின்னும் நட்சத்திரமாய் ஒளி வீசுகவே!

No comments:

Post a Comment