Saturday, December 10, 2011

கெப்ளர் விண்கலத்தின் வெற்றி!

நறுக்.. துணுக்…

பவள சங்கரி

நாசா உறுதிப்படுத்திய பூமியைப் போன்ற மற்றொரு கிரகம்!


அண்டவெளியில் , பூமியைப் போன்று உயிரினங்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்புடையதாக வேறு ஏதும் கிரகங்கள் உள்ளதா என்பதனை அறியும் விதமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் விண்கலம் ஆய்வு செய்து கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு விஞ்ஞானிகளால் பூமியைப் போன்ற கிரகம் ஒன்று வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெப்ளர் விண்கலம் மூலம் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதில் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .கெப்ளர் விண்கலத்தில் உள்ள அதி நவீன புகைப்படக்கருவிகள் சுமார் 600 இலட்சம் கோடி கி.மீ தூரத்தில் பூமி போன்றதொரு கிரகம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பூமிக்குக் கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால் அங்கு மென்மையான வெப்பநிலை நிலவுகிறதாம்.இதனால் திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கெப்ளர் 22பி என்று பெயரிடப்பட்ட அந்த கிரகம் பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், அதன் வெப்ப நிலைகள் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பானதொரு தொலைவிலிருந்து சுற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட இந்த கெப்ளர் விண்கலம் சுமார் 155,000 நட்சத்திரங்களைக் கண்கானித்து வருகிறது. இத்தொலைக்காட்டி மூலம் இதுவரை கிரகங்கள் என்று அங்கீகாரம் பெறத்தக்கவைகள் என 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

6 comments:

  1. அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஈழத்தமிழர் நாங்கள் அகதித் தஞ்சம் கேட்க இன்னொரு இடமும் இருக்கிறதோ !

    ReplyDelete
  3. தொலைவு முன்னூறு ஒளிவருடங்கள் தானாமே? அடுத்த பஸ்சைப் பிடிச்சுப் போயிற வேண்டியது தான்.

    ReplyDelete
  4. நண்பர் நண்டு நொரண்டு நனி நன்றி.

    ReplyDelete
  5. அன்பின் ஹேமா,

    யாதும் ஊரே, யாவரும் கேளிர்! இதில் யார் அகதி சகோதரி? நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.. ஆண்டவன் படைத்த பூமியில் நாம் அனைவருமே அகதிகள்தான்... காலம் மாறும், கவலை வேண்டாம் அன்பு சகோதரி.

    ReplyDelete
  6. அன்பின் அப்பாதுரை சார்,

    உங்களுக்கும் சேர்த்தே அட்வான்ஸ் புக்கிங் டிக்கெட் போட்டுட்டேனே.... ஓ சொல்ல மறந்துட்டேன் போல. தயாராகுங்கள் சீக்கிரம், ஊழலற்ற, மின் வெட்டு இல்லாத, விலையேற்றமே இல்லாத ஆதாம் ,ஏவாள் காலம் போன்று இயற்கை அன்னையின் ஆட்சிபீடத்தில் ஆனந்த வாழ்க்கையாம்.... பட்சி சொல்லியது.

    ReplyDelete