Wednesday, May 2, 2012

கவிக்குயிலின் கவிமுகம்! - சரோஜினி நாயுடு




சரோஜினி நாயுடு (1879 – 1949) இந்திய ஆங்கிலக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, அரசியல் ஆர்வலர், சொற்பொழிவாளர், மற்றும் நிர்வாகி இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர், மற்றும் முதல் இந்திய மாநில கவர்னராக இருந்தவர். இளமையில் எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார்.
“ எம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகள் மற்றும் மலைக்குகைகளின் காதலர்களாகவும், பெரிய கற்பனாவாதிகளாகவும், அறிஞர்களாகவும், பெருந்துறவிகளாகவும் கூட இருந்துள்ளார்கள்” என்ற இவரது வாதத்தின் தாக்கம் இவர்தம் கவிதைகளிலும் இருக்கக் காணலாம். பதின்மப் பருவத்திலேயே, பெருங்கவிஞர் ஆர்தூர் சைமன்ஸ், கவிக்குயில் சரோஜினி அம்மையாரைக் கண்ட விதமே ஒரு கவிதை.
“ அவள் கண்கள் ஆழ்ந்த குளம் – நீங்கள் அதன் மிக ஆழத்தில் விழத்தெரிவீர்கள் . பின்புறம்,பரந்து விரிந்த கூந்தலும், நீண்ட பளபளக்கும் உடையும், மெல்லிய இசை போன்ற அவருடைய இனிய குரலும், மிகத்தனித்தன்மை வாய்ந்தது” என்பார்.
என்மண்ட் கோஸ் அவரைப் பற்றிக் கூறும்போது, “பதினாறு வயதே நிரம்பிய சிறுமியாயினும், அற்புதமான மனப்பக்குவமும் அதிசயத்தக்க கல்வியறிவும், உலக ஞானமும் கொண்டவள்” என்று பாராட்டுகிறார்.
சரோஜினி நாயுடுவின் காதல் கவிதை இதோ:
Ecstasy
Cover mine eyes, O my Love!
Mine eyes that are weary of bliss
As of light that is poignant and strong
O silence my lips with a kiss,
My lips that are weary of song!
Shelter my soul, O my love!
My soul is bent low with the pain
And the burden of love, like the grace
Of a flower that is smitten with rain:
O shelter my soul from thy face!
பேரானந்தம்! (தமிழாக்கம்)
காதலே எம் காதலே, எம் கண்களைக் காப்புசெய்!
ஆனந்தக் களைப்புற்றிருக்கும் எம் கண்களை
கூசச்செய்கிறது அந்த அடர்ந்த ஒளி வெள்ளம்!
ஓ … எம் இதழ்களை மௌனமாக்கட்டும், ஓர் அன்பு முத்தம்
கீதமிசைத்து சோர்வடைந்திருக்கும் எம் இதழ்களிவை!
ஓ எம் காதலே, எம் ஆன்மாவின் உறைவிடமாயிரு!
வாதனையினால் வளைந்து கிடக்கிறது எம் ஆன்மா
அக்காதலின் சுமையே, அருளாய்
மழை மோதலால் துவண்ட மலராய்
உம்முடைய முகமலரில் புதையட்டும் எம் ஆன்மா!
படத்திற்கு நன்றி :

நன்றி : வல்லமை பிரசுரம்

4 comments:

  1. கவிக்குயிலைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் புவனேஸ்வரி ராமநாதன்,

      மிக்க நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  2. டீனேஜ் பெண்ணின் முதல் கவிதை போல இருக்கிறது. இருந்தாலும் நம்ம நாட்டுப் பெண்ணில்லையா? :)

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அப்பாதுரை சார்,

      உண்மைதான். :)

      Delete