Tuesday, July 10, 2012

வாழ்க்கைப் படகு!




கடலோடா கால்வால் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
இடன் அறிதல் - குறள் (496)

கடலலையினூடே தோணியும்
மன அலையினூடே வாழ்வும்
அலங்காரத் தேராய் அற்புதமாய்
வளையவரும் இனிய காட்சிகள்

சூறாவளியாய் சுழட்டியடித்து
புரட்டிப்போடும் வீச்சில் ஆழிக்கொடியும்
ஆழிவித்தும் ஆழ்ந்துபோகும்
ஆழும்பாழாய் ஆகிப்போகும்.

ஆழ்வான் கண்ட அல்லியாய்
சூழ்வான் இல்லாச் சுடரொளியாய்
ஆழ்வார் கன்மியாய் அகம் குளிர
ஆவேலியிலும் ஆழியான் வண்ணம்
காணும்பேறு பெற்று ஆவல்லியாய்
அவனைச் சூழ்ந்து தென்றல் வீசும்
சோலையில் சுகமாய் தவமிருந்து
அமைதியினூடே இனியதொரு பயணம்!
காட்சிப்பிழையில்லாத சுகமானபயணம்!

படத்திற்கு நன்றி:

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...