Wednesday, February 13, 2013

காதலின் வேதம்



பவள சங்கரி



 
காதலின் கீதம் – Song Of Love (Khalil Gibran) – மொழிபெயர்ப்பு




காதலர்களின் விழிகளும் யானே
இச்சையூட்டும் இன்பரசமும் யானே
மற்றுமந்த உளத்தின் ஊட்டமும் யானே
விடியலில் மலரும் மனமும்  முத்தமிட்டுத்தம் அமுதகத்தின்மீது கிடத்திக்கொள்ளும் அக்கன்னியவளையும் கொண்டதோர் ரோசாவும் யானே.


நிலையான செல்வத்தின் இல்லமும் யானே
இன்புறவின் துவக்கமும் யானே.
சாந்தம் மற்றும் கலக்கமின்மையின் தொடக்கமும் .யானே
இரமியத்தின் இதழின் மீதான் மென்னகையும் யானே
எம்மைத் தொடர்ந்து பற்றும் தருணமதிலந்த யுவன்தம் கடமையையும் மறந்து, அவர்த்ம் முழு வாழ்வும் இன்பக்கனாவின் நிதர்சனமாகிறது.



பாவலரின் எழுச்சியும் யானே,
கலைஞனின் வெளிப்படுத்துகையும் யானே,
மற்றுமந்த இசைக்கலைஞனின் அருட்கிளர்ச்சியும் யானே


கருணைநிறைத் தாயினால் நேசிக்கப்பட்டதோர் குழவியின் இதயமதின் புனிதாலயமும் யானே.



ஓர் இருதயத்தின் கதறலில் தோன்றுபவன் யான்;
ஓர் கோரிக்கையதைத் தவிர்ப்பவன் யான்;
எம் அமைவு தேடுமந்த இருதயத்தின் இச்சையதை;
அஃது குரலின் வெற்றுக் கோரிக்கையை விலக்குகிறது.


ஆதாமிற்கு ஏவாளின் மூலமாகவே காட்சியளித்தேன் யான்.
நாடு கடத்தலே அவர்தம் தேர்வாக இருந்தபோழ்தும் எம்மையே சாலமனுக்கு வெளிப்படுத்தியதோடு
எம்மால் அவர் இதமும் பெற்றார்.


ஹெலேனாவைப் பார்த்து யான் புன்னகைத்ததால் தர்வாடாவை அழித்தாளவள்:
இருப்பினும் கிளியோப்பாட்ராவிற்கு யான் மகுடம் சூட்டியதால் அந்த நைல் நதிக்கரையில் அமைதி நிலவியது.


காலங்களைப் போன்றவன் யான் – இன்று கட்டமைந்து நாளை அழிந்து படக்கூடியது;
ஆக்கலும், அழித்தலும் புரியுமோர் இறையைப் போன்றோன் யான்;
ஓர் ஊதாப்பூவின் பெருமூச்சைக் காட்டிலும் இனிமையானவன் யான்;
பொங்கியெழும் புயலைக் காட்டிலும் உக்கிரமானவன் யான்.


வெகுமதிகள் மட்டுமே வசீகரிப்பதில்லை எம்மை;
பிரிவு ஊக்கமிழக்கச் செய்வதில்லை எம்மை;
இன்மையும் செதுக்குவதில்லை எம்மை;
இழப்பச்சம் மெய்ப்பிப்பதில்லை எம் விழிப்புணர்வை;
உன்மத்தமும் எமக்கோர் ஆதாரமாவதில்லை.


ஓ நாடிச்செல்வோரே, உண்மையை மன்றாடும் உளமையே யான்;
மேலும் தேடலிலும், பெறுதலிலும் மற்றும் எம்மைக் காப்பதிலும் உள்ள உம் நேர்மையே எம் நடத்தையைத் தீர்மானிக்கலாம்


SONG OF LOVE – WATCH IN YOUTUBE
http://youtu.be/-FczCTPJ_YM

நன்றி: வல்லமை 

No comments:

Post a Comment