Sunday, April 7, 2013

அடைப்புக்குறியினுள் ஒரு உள்ளம்



காற்று வெளி இதழ் வெளியீட


பவள சங்கரி

வரைவிலக்கணம் வகுப்பதில் வல்லவர் அந்த விஞ்ஞானி. உலகில் உள்ள எந்தப் பொருளாயினும் அதற்கு அழகான வரைவிலக்கணம் கொடுத்து விடுவார்.

ஒரு முறை ஒரு பெருங்கூட்டத்தில் உரையாற்ற அவரை அழைத்திருந்தனர்.

அங்கு ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் காட்டி அதன் வரைவிலக்கணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவரும் தயங்காமல் எல்லோருக்கும் விடை பகர்ந்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒருவர் எழுந்து,’ஐயா அன்பு என்பதன் வரைவிலக்கணம் யாது ?’ என்று வினவினார்.

சற்று நிதானித்த விஞ்ஞானி, ‘கொடுக்கல், வாங்கல்’, என்றார்.

உடனே அவர், அப்பொழுது கொடுத்தல் இல்லையென்றால் வாங்குதல் இல்லையா? அப்படியானால், அன்பு வியாபாரப் பொருளா, என்றார்.

உடனே அந்த விஞ்ஞானி, ‘இல்லையில்லை, அன்பு நிலையான ஒரு குணம்’, என்றார்.

அதற்கு அவர், நிலையில்லாவிட்டால் அது அன்பு இல்லையா? என்று வினவினார்.

உடனே அந்த விஞ்ஞானி இல்லையில்லை, அன்பு என்பது அடிமைப்படுத்துவது என்றார்.

அப்பொழுது, அன்பில்லாவிட்டால் சுதந்திரப் பறவைகளா, மனிதர் என்றார்.

விஞ்ஞானியோ, உடனே, ‘இல்லையில்லை, வாழ்க்கை எனும் குருச்சேத்திரத்தில் சங்காகவும், புல்லாங்குழலாகவும் இருப்பது அன்பு என்றார்.

உடனே அவர், அப்போது அன்பு என்றாலே, போராட்டம் மட்டும்தானா என்று கேட்டார்.

இல்லையில்லை, ஆத்ம நாதத்தின் வெளிப்பாடே அன்பு என்றார்.

அப்பொழுது ஆத்ம சக்தியில்லாத உயிர்களிடத்தில் அன்பு இருக்காதா, என்றான்.

அடைப்புக்குறிக்குள் தாங்கிப்பிடிப்பது அன்பு என்று கூடக் கொள்ளலாம், என்றார்.

ஓ, அப்படியானால் ஊன்றுகோலாக இருப்பதுதான் அன்பு என்பதா?

இல்லையில்லை, அது ஒரு தங்கக்கூண்டு என்றார் அந்த ஞானி.

ஓ, அப்பொழுது அன்பென்பது சொந்தச் சிறையா?

அந்தச் சிறையின் எப்படிப்பட்ட கைதியாய் நீ இருக்கப் போகிறாய்?

ஒரு நத்தை கூட்டிற்குள் சுருண்டு கிடப்பதைப் போலவா?

சிறகுவிரித்து சுதந்திரமாய் இருக்கப் போகிறாயா?

தங்கக் கூண்டின் திறவுகோலை உன் வசம் கொண்டவனாய் இரு.

உன் சுவாசக் காற்றிற்கு அணை போடாத சிறையாக இருக்க வேண்டுமா?

கூண்டின் எல்லையை விரிவாக்கிக் கொள்.
சுதந்திரக் காற்றை இன்பமாக, பாதுகாப்பாக சுவாசிக்கும் கலையை கற்றுக் கொள்!

வெற்றி உனதே!

1 comment: