Friday, February 20, 2015

வரம் வேண்டும்!


பவள சங்கரி



வரம்வேண்டும் பராசக்தி நீவரவேண்டும்
மனம்வேண்டும் நதிபோலோடவே நாளும்
பகடையாயுருட்டும் விதியின் ஆட்டமும்
சிதறும் சிந்தையாவும் சீர்பெறவேண்டும்
கபடமில்லா உடுக்கையாய் நேயம்வேண்டும்
தீதறியாதோர் திண்ணம் தீயாயொளிரும்
திட்பமும் மனம்நோகாமல் விலகவேண்டும்
நன்னெறியால் நயந்தநேசம் கூடவேண்டும்
தன்னைத்தானுணரும் தவம் சித்திக்கவேண்டும்
மண்ணைப் பொன்னாய் தரிசிக்கும் சித்தமும்
நீயருளல் வேண்டும்! பண்ணில் இசையாய்
விண்ணில் மேகமாய் பொழியும் பராசக்தியே
கண்ணில் காவியமாய் உதிக்கும் நாயகியே
உன்னில் என்னைக்காணும் வரமளித்தருள்வாயே!

1 comment:

  1. விலக வேண்டும்... விலக்கவும் வேண்டும்...

    ReplyDelete

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...