Thursday, July 9, 2015

தல விருட்சம்

பவள சங்கரி


அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் என்று இருக்கிறதே. அதன் தாத்பரியம் என்ன என்று தெரியுமா? ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் காடுகளில் குடில் அமைத்து கூட்டமாக வாழ்த்து வந்தனர். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இல்லை. அந்த காலத்தில் மரத்தினடியில் இறை உருவை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில், காடுகள், நாடு, நகரமாகவும் மாறி, கட்டிட அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பிரம்மாண்டமான ஆலயங்களும் உருவாயின. மரத்தடியில் இருந்த தெய்வச் சிலைகள் ஆலயங்களில், மூலத்தானத்தில் வைக்கப்பட்டபோது, ஆண்டவனுக்கு அடைக்கலமான மரங்கள் தல விருட்சங்களாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஐதீகம்.... சுவையான தகவல் அல்லவா?
சிவன் கோவிலில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும்.

1 comment: