Sunday, July 10, 2016

என்னத்தச் சொல்ல?!



நேற்று எங்க ஊரூ அரசமரத்தடியில் இருவர் .....

அண்ணே.. அண்ணே..  நம்ம ஏரியாவுக்கு நான் இந்தக் ...... கட்சி மெம்பராயிட்டேனுங்க.. உங்களுக்கு ஏதாவது வேலையாவணும்னா வாங்கண்ணே...

அப்படியாப்பா.. நல்லது.. எம்புட்டு பணம் வரும் அத மொத சொல்லு.. எனக்கு எவ்ளோ வரும் அதையும் சொல்லு.. 

வரும்னே..  வந்தா நா யாருக்கு செய்யப்போறன்.. நானும் எங்கூட்டுக்காரியும்தான இருக்கோம்.. புள்ளையா குட்டியா...

அதுசரி. இப்போதைக்கு ஒரு பார்ட்டியாவது குடுக்கறியா அத சொல்லு முதல்ல..

கூடிய சீக்கிரம் என்னை மேயரா ஆக்கறதா (?!!!?) சொல்லியிருக்காங்க. அப்பறம் எல்லாம் நாமதான... பார்த்துக்கலாம்னே..

ஓ.. அது வேறய.. சொல்லவேயில்ல.. அது எப்போ..

ஆமாம்ணே.. (பாவம்.. வெக்க, வெக்கமா இருக்கும் போல.. அவ்ளோ நெளிவு)
சரிப்பா சொல்லு எப்ப பார்ட்டி

சரிண்ணே மெம்பர் கார்டு வரட்டும்ணே பார்ட்டி குடுத்தாப்போச்சு...
அடப்பாவி... அதுக்குள்ளயா இம்புட்டு பில்டப்பு...

பொது சனம் புலம்பல் - என்னப்பா நடக்குது இங்க.. மேயர்  அப்படி என்ன எளப்ப சொளப்பமான பதவியா.. இப்புடி கூவி விப்பாய்ங்களா.... !ஒன்னுமே புரியல உலகத்துல...



  

No comments:

Post a Comment