Monday, July 10, 2017

வாழ்கணக்கு!



கணக்குப்போட்டு வாழ்வதில் நிம்மதியாம்
அரைப்புள்ளி கால்புள்ளியாய் குழப்புவதெல்லாம்
 முற்றுப் புள்ளியில் தெளிவாகிவிடுகிறது
பெருகுவதெல்லாம் காழ்ப்பும் கயமையும்
கழிவதெல்லாம் அமைதியும் அருங்குணமும்
வகுப்பதெல்லாம் வரவும் வழக்கும்
கூட்டுவதெல்லாம் குழப்பமும் வஞ்சகமும்
கணக்குப்போட்டே கழிந்துவிடும் காலம்
மிஞ்சுவதெல்லாம் சிவமும் சித்தமும்
எஞ்சிய வாழ்க்கையின் கணக்கும் 
வஞ்சமிலா நோக்கமும் ஆக்கமும்
உறவும் பிரிவும் வரவும் செலவும்
தஞ்சமென தவமும் தயாளகுணமும்!
பஞ்சமில்லா அன்பும் பாசமும்!!

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...