வி.ஐ.டி.
வேந்தர் கல்விக்கோ. விசுவநாதன் ஐயா அவர்களின் தமிழியக்கம் சார்பில் தமிழகம்
முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு விழா எடுக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (26/01/2020) ஈரோடு அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சுகந்தி அவர்களின் ஒத்துழைப்புடன், உயர்திரு அரங்க.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள்
குறிப்பிட்ட காலத்தில் குறள் ஒப்புவிக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழியக்க
இணைச் செயலாளர் முனைவர் ஜோதிமணி, பொருளாளர் முனைவர் செந்தாமரை ஆகியோருடன், திரு
அரங்க சுப்பிரமணியமும் நடுவராக இருந்து, பங்கு பெற்ற அனைத்து மாணவச்
செல்வங்களுக்கும் தமிழியக்கத்தின் சார்பாக சான்றிதழ்களும், சிறப்பாக ஒப்புவித்த
மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வரலாற்றாசிரியர் திரு
கணியன் பாலன், ஈரோடு நவரசம் கல்லூரியின் துணை முதல்வரும், ஈரோடு மாவட்ட
தமிழியக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு செல்வம், நாமக்கல் மாவட்டச் செயலாளர்
திரு இளங்கோ ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு குறள் சார்ந்த அரிய பலக்
கருத்துகளை எடுத்துக்கூறினர். ஐயன் வள்ளுவருக்கு குறள் இசை அஞ்சலி
செலுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
No comments:
Post a Comment