Wednesday, July 28, 2010

இளைஞர்களே............எங்கே போகிறோம்?


வசந்த கால பொன்மாலைப் பொழுது. பரந்து, விரிந்து, விழுதுகள் ஊன்றி நிழல் பரப்பிக் கொண்டிருக்கும், நெடிதுயர்ந்த ஆலமரம். அதன் உச்சியில் இரு கிளைகள் சங்கமிக்கும் இணைப்பின் மடியில் ஒரு குச்சி வீடு, அழகிய குருவிக்கூடு. குருவிக் குஞ்சுகள் குக்கூ......குக்கூ........குக்கூ என்று விடாமல் கத்திக் கொண்டேயிருக்க, சர் என்று எங்கிருந்தோ பறந்து வந்த தாய்க் குருவி அந்த குஞ்சுகள் ஒவ்வொன்றுக்கும் உணவை ஊட்டிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பறக்கவும் கற்றுக் கொண்டிருந்தன அந்தக குருவிகுஞ்சுகள் நாட்கள்தான். குஞ்சுகள் மெல்ல, மெல்ல பறக்கவும் கற்றுக் கொண்டிருந்தன, அந்தக் குஞ்சுகள். சில நாட்களிலேயே நன்கு பறக்க கற்றுக் கொண்டு, தன் இரையைத் தானே தேடவும், தனக்காக கூடு கட்டிக் கொள்ளவும் பழகிவிட்டன. பறவைகள், மிருகங்கள் எல்லாமே இப்படித்தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சுதந்திரமாக இருக்கவே பழகிக் கொள்கின்றன.

ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுக்கு ஊட்டி வளர்க்கும் இந்த சுதந்திரப் பண்பு மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். தாங்கள், தங்கள் குடும்ப உறவுகளை சிரம் மேல் தாங்கி தங்கக் கூண்டில் எந்தப் பாதிப்பும் வராத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் எண்ணக் கூடும். ஆனால் அதன் அளவு கோளில் ஒரு நிர்ணயம் வேண்டும். அதிக பாதுகாப்பு உணர்ச்சி, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பாதிக்கச் செய்யும் பாச வலையாக மாறிவிடக் கூடாது . பெண் குழந்தைகளை பொத்தி வளர்க்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு அவர்களுக்கு தனித்து சுதந்திரமாக இயங்கக் கூடிய தைரியத்தையும், முடிவெடுப்பதில் ஒரு தெளிவையும் ,எப்பேர்ப்பட்ட, சூழலிலும் தன்னைத்tதானே தற்காத்துக் கொள்ளவும் , சுய கட்டுப்பாட்டுணர்வையும், சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

இன்றைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளும், படிப்பு, மற்றும் பணி காரணமாக தனியாக வெளிநாடுகளில் கூடச் சென்று வருடக் கணக்கில் தங்க வேண்டிய சூழ்நிலை க்கு ஆளாகிறார்கள். அதிக கட்டுப் பாட்டுடன் வளரும் குழந்தைகள், முதல் முறையாக முழுமையான சுதந்திரம் பெறும் போது, காணாததை கண்டது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கைச் சூழல் மட்டுமன்றி பெற்றோரின் கனவு, நம்முடைய இந்தியப் பண்பாடு கலாச்சாரம் அத்துனையையும் பதம் பார்த்துவிடுகிறது.

மதுரையிலிருந்து வந்த ஒரு பெண்ணும் சென்னையிலிருந்து வந்த ஒரு இளைஞனும் அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் சென்றவர்கள், கண்ணோடு கண் நோக்கியதன் விளைவு, இன்று இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து [?] கொண்டிருக்கிறார்கள். இதையறியாத பெற்றோர் அவர்களுக்கு இந்தியாவில் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திடீரென ஒரு நாள் இது தெரிய வரும் போது அவர்கள் நிலை என்னவாகப் போகிறது என்று ஒரு பெற்றோரின் நிலையிலிருந்து யோசிக்கும் போது பேரதிர்சியாக உள்ளது. நம் குழந்தைகள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைப் படும் அதே வேளையில் நம் கலாச்சாரம் எப்படியெல்லாம் சீரழிகிறது என்று சிந்தித்தால் அடிவயிறு கலங்கத்தான் செய்கிறது.

இன்னும் இருக்கிறது................

2 comments:

  1. நீங்க நிறைய தகவல்களை சொல்லுறீங்க. நன்றி.

    ReplyDelete
  2. நன்றிங்க சிவாஜி.

    ReplyDelete