Tuesday, October 18, 2011

வாழ்க்கை ஓடம்!

அலையினூடே உயர்ந்து தாழ்ந்து வாழ்க்கை ஓடமாய்
உயர்வை நோக்கி உன்னத கீதமாய் ஒலியூட்டி
தாழ்வின் நீட்சியிலும் நித்சலமான நீரோட்டமாய்.......
மால்வண்ணனின் அருள் பனித்துளியாய் பட்டொளி வீச
கார்முகில் களிநடம் புரியும் கனன்ற பொழுதுகளிலும்
பால்வண்ண நிலவொளியின் இலையுதிர் பருவமதில்
புள்ளினக் கூட்டமொன்று புதுமலர் காண மனம்நாடி
கருத்தாய் கதைப்பல பேசி நாடுவிட்டு காடுதேடி
வகையாய் வண்ணம் கண்டு குதூகலம் கொண்டு
இன்பமாய் இனிமையாய் இலக்கியமாய் இதமாய் ..............

2 comments:

  1. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

    ReplyDelete
  2. நன்றி அம்பாளடியாள். வாருங்கள் வரவேற்கிறோம்.

    ReplyDelete