Saturday, October 13, 2012

SPIRIT COMES.. SPIRIT COMES.. SPIRIT COMES...


நம்பினால் நம்புங்கள்!

--
நான் இன்று என் தோழி ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அமானுஷ்யம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு ஆவி, பேய் என்பதிலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. கடவுளின் சக்தி முன்னால் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது (?) என்று தைரியம் அதிகம் உண்டு. ஆனால் அவள் அதில் அதிகமாகவே நம்பிக்கை உள்ளவள்.அவர்கள் வீட்டில் அவ்வப்போது ஓஜோ பிளேட் மூலமாக ஆவியை வரவழைத்து குறி கேட்பார்களாம்... 

ஒரு போர்டில் ஆங்கில எழுத்துக்கள் வட்டமாக எழுதி, அதன் உட்புறம் எண்கள் 1 முதல் 10 வரை, மேலும், கீழும் YES, NO, என்று எழுதிக் கொள்கிறார்கள். மத்தியில் ஒரு சிறு கற்பூரம் வைத்து அதன்மீது ஒரு குட்டி டம்ளர் கவிழ்த்து வைக்கிறார்கள்.  இரண்டு பக்கம் இருவர் அமர்ந்து கொண்டு அந்த டம்ளர்மீது ஆள்காட்டி விரலை வைத்துக் கொள்கிறார்கள். SPIRIT COMES... SPIRIT COMES... SPIRIT COMES என்று மூன்று முறை சொல்கிறார்கள்.  என்ன ஆச்சரியம்! அந்த டம்ளரில் ஒரு அசைவு தெரிகிறது. நான் உடனே கற்பூரம் எரிவதால் அந்த சூட்டின் காரணமாக இந்த அசைவு என்றேன். ஆனால் அடுத்தடுத்து நடந்ததைப் பார்த்தவுடன் கொஞ்சம் சந்தேகம் மெதுவாக வந்துவிட்டது... ஒரே குழப்பத்துடன் திரும்பி வந்தேன்.



என் தங்கையும் உடன் வந்திருந்தாள். அவளுடைய பெண் 11ம் வகுப்பு படிக்கிறாள். அடுத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை.. அதைப்பற்றி கேட்டார்கள். அதற்கு நல்ல மதிப்பெண் வாங்குவாளா என்று கேட்டதற்கு yes என்று வந்தது.. எவ்வளவு என்று கேட்டதற்கு 1009 என்றது. அந்த டம்ளர் அப்படியே நகர்ந்து அந்த எண்ணில் போய் நிற்கிறது.. அந்தப் பெண் சென்னை குயீன் மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பாள் என்று சொன்னவுடன்,அவள் அழ ஆரம்பித்து விட்டாள். அவளை தேற்றுவதற்குள் போதுமென்றாகி விட்டது. அவர்கள் வீட்டில் திருமணம் பற்றி கேட்டார்கள். அந்தப் பையனுக்கு காதல் திருமணமா என்று கேட்டார்கள். இல்லை என்றது.2 வருடத்தில், எம்.சி.ஏ படித்து சி.டி.எஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் வள்ளிதான் மணமகள் என்றது... ஏற்கனவே பல முறை இது போன்று பலருக்கு அவர்கள் கேட்டது சரியாக இருந்ததாம்... என் பங்குக்கு நானும் சில கேள்விகள் கேட்டேன்.. அது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்... நான் கேட்டது கூடங்குளம் பற்றி.. அது இன்னும் ஓராண்டில் திறக்குமாம்.. அதுவரை மின்வெட்டு இப்படித்தான் இருக்குமாம்.. உலகம் அழிவது பற்றி கேட்டேன். 2012ல் அழியுமாம்?  அடுத்து சட்ட மன்ற தேர்தல் பற்றி கேட்டேன்.. . போதும் மீதமெல்லாம் சொன்னால் பிரச்சனை வரும்... ஆனால் ஒன்று மட்டும் உறுதிங்க...  உலக அரசியலையேத் தன் விரல் நுனியில் வைத்திருக்கிறது ஆவியுலகம்! 3 மணி நேரம் பொழுது போனதே தெரியவில்லை! ஆச்சரியமாக இருந்தது.. 
                                                              

4 comments:

  1. உலக அரசியலையேத் தன் விரல் நுனியில் வைத்திருக்கிறது ஆவியுலகம்!

    விசித்திரமான பகிர்வு !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க ராஜராஜேஸ்வரி. நம்ப முடியவில்லை என்னாலும்..ஆச்சரியமாக இருந்தது.

      அன்புடன்
      பவளா

      Delete
  2. iS THERE ANY POSSIBILITY TO KNOW FURTHER ABOUT THIS....PLS

    ReplyDelete
  3. enn 2014 il ulagam azhiya villai

    ReplyDelete