Friday, January 11, 2013

சுவாமி விவேகானந்தரின் தத்துவ முத்துக்கள்!


பவள சங்கரி

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்!

உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே!

உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே!

உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே!


15 வாழ்க்கைத் தத்துவங்கள்

1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி.
சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி.


2. உம்முடைய எண்ணமே உம்மை வழிநடத்துகிறது.
நம் எண்ணங்களே ஒரு பொருளை அழகுபடுத்தவோ அன்றி அவலட்சணப்படுத்தவோ காரணமாகிறது. நல்ல எண்ணங்களே நல்ல செயலுக்கு வித்தாகி, உலகிற்கு ஒளியூட்டுகிறது.

3. வாழ்க்கை சௌந்தர்யமானது.
வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொளல் வேண்டும்.

4. எண்ணம் போல் வாழ்வு.
உம்மைக் கடவுளாக நீவிர் நினைத்தால் கடவுளாகவே ஆகிறீர். தீய எண்ணம் கொண்ட தேவதாவாக எண்ணினால் அதுவாகவே ஆகிறீர்.

5. தளைகளை விலக்கிக் கொள்ளுங்கள்.
உள்ளக்கோவிலில் இறை எனும் உன்னதத்தை உறையச் செய்தால், தளைகளனைத்தும் விலகி, சுதந்திரமாக உம்மை வாழச் செய்யும்.

6. குறை கூறும் ஆட்டத்தை விளையாடாதே.
அடுத்தவரிடம் குறை காணும் குணம் கொள்ளாதீர், உம்மால் அவரோடு இணங்கி கைகோர்த்து நடக்க முடிந்தால் நல்லது. இல்லையேல் அவர் பாதையில் அவர் செல்ல ஒதுங்கி வழிவிடுதலே உன்னதம்.

7. உதவும் மனப்பான்மை கொண்டிரு.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (குறள் - 105)

8. உம்முடைய நிறைவான கொள்கைகளை உயரச்செய்யும்
உன்னத இலட்சியம் கொண்டோரின் வெற்றிக்கு உம்மால் இயன்றதைச் செய்து அவரை ஊக்குவிப்பதே சிறந்த பண்பு..

9. உம் ஆன்மாவிற்கு செவி சாய்த்திரும்.
உம் ஆன்மாவே உம்மை நல்வழிப்படுத்தக்கூடிய ஆசான்.

10. நீவிர் நீவிராக இரும்.
உங்களுடைய இயற்கைக்கு உகந்து நீங்கள் நீங்களாகவே இருப்பதே சாலச் சிறந்தது.

11. இயலாமை என்று எதுவுமில்லை.
நான் வலுவிழந்திருக்கிறேன் என்று எண்ணுவதும், சொல்லுவதுமே பெரிய பாவம். அடுத்தவரையும் வலுவிழந்தவர் என்று எண்ணுவதும் பாவச்செயலே.

12. நீவிரே சக்தி உடையவர்.
அனைத்துச் சக்திகளும் பெற்றவர் நாமே என்ற உறுதியான எண்ணம் கொண்டிருத்தல் வேண்டும்.

13. அன்றாடம் பயிலுங்கள்.
நம் ஆன்மாவிற்குள்ளேயே கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளது. ஆன்மாவின் திரையை விலக்கி நம்மை நாம் உணர்ந்தால் அறிவின் ஒளியைக் காணலாம்.

14. உண்மையாயிரு!
சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். சத்தியத்தை நிலைநிறுத்தும் பொருட்டு எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் சத்தியத்தை இழத்தல் கூடாது.

15. மாற்றி யோசியுங்கள்!
தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இந்த உலகில் இல்லை. ஆழ்ந்து சிந்திந்து செயல்பட்டால அதற்கான வல்லமையை எளிதில் பெறலாம்.

நன்றி : வல்லமை

No comments:

Post a Comment