Monday, January 26, 2015

குடியரசு தின நல்வாழ்த்துகள்!






பவள சங்கரி

அன்னிய ஆதிக்கமெனும் அகந்தைத்தளையை
அகிம்சையெனும் சம்மட்டியால் அடித்துநொறுக்கி
இம்சையெலாம் களைந்து அன்னையவளை
சிம்மாசனமேற்றிய சிம்மங்களை சிகரமேற்றி
நினைவுகூரும் நிறைவான தருணமிது!

தேகம்வருத்தி குருதிசிந்தி இன்னுயிரீந்து
தாய்மண்ணை மீட்ட மித்திரர்கள்
வன்மையோரவர் பாதம் பணிந்து
நன்முத்துக்களின் தியாகம் போற்றி
அவர்தம் வழித்தொடரும் தருணமிது!

ஒருதாய் மக்களெனும் உன்னதமும்
ஓர்குலம் ஓரினமெனும் நல்மனமும்
அறவழியும் அன்புநெறியும் உளமேற்று
புறவழியும் புன்மைநெறியும் புறந்தள்ளி
புத்தொளியூட்டி வீரவாகை சூட்டியதருணமிது!

இந்தியநாடு என்வீடு இந்தியனென்பதென் இறுமாப்பு! 
சத்தியமும் சமத்துவமும் எங்கள் உயிர்மூச்சு!
வந்தே மாதரமென்பது எங்கள் அன்றாடப்பேச்சு!
புத்தன் இயேசு காந்தி அல்லாவென எல்லாமுமெங்கள் நேசம்! 
ஒன்றுகூடி உறவாடிக் கொண்டாடுமெங்கள் தேசம்!

1 comment:

  1. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete