Tuesday, July 20, 2010

குற்றம் கண்டு தனைத் திருத்துதல்

தன் குற்றம், குறை, கடமை, தன்னுள் கண்டு,
தான் கண்டு, தனைத்திருத்தும் தகைமை வந்தால்,
என் குற்றம், பிறர் மீது சுமத்தக் கூடும்.
ஏதெனும் கண்டாலும், மன்னித்தாலும்,
மேன்மைக்கே மனம் உயரும். பிறந்தவரால்
மிக வருத்தம், துன்பம். அதுவந்த போதும்
தன்மைக் கேயாம் செய்த பாவம் போச்சு.
நாம் கண்ட தெளிவு. இது வாழ்த்தி வாழ்வோம்.

1 comment: