Wednesday, December 8, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 7


சக்தி.

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்.
சக்தி பொய்கையில் ஞாயிறு ஒரு மலர்,
சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது;
ஒன்றாக்குவது, பலவாக்குவது,
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
குதுகுதுப்புத் தருவது.
குதூகலந் தருவது, நோவு தீர்ப்பது,
இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது,
சக்தி ஊக்கந் தருவது,
சக்தி மகிழ்ச்சி தருவது....உவப்புந் தருவது.......

மகாகவி அன்றே பாடி வைத்துச் சென்றான், சக்தியின் சக்தியைப் பற்றி....

மனித உடலும், இயந்திரம் போலத்தான்,
ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பாகம் மரை கழண்டு போகலாம், அதனை செப்பனிட்டு ஓடச் செய்வதிலேதான் ஒரு உரிமையாளனின் திறமை இருக்கிறது. அந்த வகையில் செப்பனிடும் போது அதனை ஏற்றுக் கொள்ள அடிப்படையாக உடலுக்குச் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியைத் தான் நாம் இயற்கையின் வரப்பிரசாதம் என்கிறோம். காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் இப்படி எத்தனையோ இயற்கை வளங்கள் நம் உடலுக்குச் சக்தி சேர்க்கின்றன. அதனை நன்கு பக்குவமான முறையில் சுத்தம் செய்து சமைத்து, உண்ணும் பக்குவத்தில் தயாரிப்பதில் தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.

இன்று அத்தகைய சக்தி கொடுக்கக்கூடிய
ஒரு சில பானங்கள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.அதிக பணிச்சுமை காரணமாகவோ, அதிக பயணம் காரணமாகவோ, உடல் சோர்வுறும் வேளையில்
இது போன்ற சக்தி பானங்களை பருகும் போது, வெகு விரைவிலேயே அந்த களைப்பு நீங்கி நம்மைப் புத்துணர்வு பெறச் செய்யும்.....

1. குளுகுளு ஆப்பிள் தேநீர்:

தேவையான பொருட்கள்:

1 கப் குளிர்ந்த தேநீர்
2 மேசைக் கரண்டி சக்கரை
1/2 கப் ஆப்பிள் ஜீஸ்
2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
ஒரு சில ஆப்பிள் துண்டுகள்.

செய்முறை :

அப்பிள் ஜீஸில், எலுமிச்சை சாறை கலக்கவும்.
மிக்ஸியில், இந்த ஜீஸ், தேநீர், ஐஸ் கட்டிகள், மற்றும் சக்கரை சேர்த்து அடிக்கவும்.

ஆப்பிள் துண்டுகளுடன் சில்லென்று பரிமாறவும்.


* சிங்கப்பூர் சிலிர்ப்பு......

தேவையான பொருட்கள்:

2 கப் செர்ரி ஜீஸ்
2 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு
1 பாட்டில் சோடா தண்ணீர்
2 துண்டுகள் எலுமிச்சை
4-6 செர்ரி
ஒரு கொத்து புதீனா இலை
அலங்கரிக்க சிறிது புதீனாவும், எலுமிச்சை துண்டமும்.

செய்முறை :

செர்ரி ஜீஸையும், எலுமிச்சை ஜீஸையும் கலக்கவும்.
பரிமாறுவதற்கு முன்பு சோடா தண்ணீரும் ஒரு சில புதீனா இ
லையும் சேர்த்து, சில்லென்று பரிமாறவும்.
செர்ரியும், எலுமிச்சை துண்டும் கொண்டு அலங்கரிக்கவும்.


3 காய்கனி கதம்ப ஜீஸ்:
தேவையான பொருட்கள் :

1 கப் பீட்ரூட் ஜீஸ்
1 கப் கேரட் ஜீஸ்
1 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் புதீனா இலைகள் [ பொடியாக நறுக்கியது ]
1 டீஸ்பூன் பிளாக் சால்ட்
1/2 டே.ஸ்பூன் ஆரஞ்சு சாறு[ ஸ்குவாஷ்}
1 பாட்டில் சோடா தண்ணீர்.

செய்முறை :

அனைத்து ஜீஸ் வகைகளையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பரிமாறும் போது புதீனா இலை, சோடா தண்ணீர் மற்றும் கறுப்பு உப்பு சேர்த்து, சில்லென்று பரிமாறவும்.

4. ஆறு காய்கறிகளின் காக்டெயில்.

தேவையான பொருட்கள் :

1 கப் வெள்ளரிக்காய் [ துறுவியது ]
1 கப் கேரட் [ துறுவியது ]
1 கப் லெட்டூஸ் அல்லது முட்டைகோஸ் [துறுவியது ]
1 கப் பாலக் அல்லது ஸ்பினேஸ்[ spinach ]
2 டீ.ஸ்பூன் கொத்தமல்லி இலை
3-4 புதீனா இலைகள்
சக்கரை தேவைக்கேற்ப.
உப்பு, மிளகு தூள், தூளாக்கிய ஐஸ்.

செய்முறை :

ஜீஸர் மூலமாக எல்லா கார்கறிகளிலிருந்தும் ஜீஸ் எடுத்துக் கொள்ளவும்.
தேவையான, சக்கரை, மிளகு தூள், தூள் உப்பு, சேர்த்து, ஐஸ் கட்டியுடன் பரிமாறவும்.

5. அன்னாசி மற்றும் தக்காளி பன்ச்!

தேவையான பொருட்கள்:

2 1/2 கப் தக்காளி சூப்
3 கப் அன்னாசி ஜீஸ்
1 கப் சக்கரை சிரப்
1 எலுமிச்சையின் சாறு
1/4 டீஸ்பூன் உப்பு
1/4 டீஸ்பூன் கறுப்பு மிளகு தூள்

செய்முறை :

தக்காளி சூப்பும் சக்கரை சிரப்பையும் கலக்கவும்.
நன்கு ஆறியவுடன் அதில் அன்னாசி ஜீஸ் மற்றும் எலுமிச்சை ஜீஸீம் சேர்த்து கலக்கவும்.
மிளகு தூளும், உப்பும் தூவி, எலுமிச்சை துண்டுகள் வைத்து அலங்கரித்து உடனே பரிமாறவும்.

15 comments:

  1. ஆஹா ரொம்ப நாளா காணோமேன்னு நினைச்சுகிட்டே இருந்தேன். சூப்பர். நன்றி மேடம்..

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல பதிவு கண்டிப்பா செஞ்சு பாக்றேன் மேடம் மிக்க நன்றி

    ReplyDelete
  3. சக்தி நிறைந்த ரெசிபி..

    ReplyDelete
  4. புத்துணர்ச்சி தரும் பானங்கள்!

    ReplyDelete
  5. எந்த காய்கறியும் இங்க கிலோ 60ரூக்கு மேல. இதுல ஜூஊஊஊஊஊஊஸ்ஸு.

    ReplyDelete
  6. நன்றி காயத்ரி......புத்துணர்வு பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஜெரி நண்பரே நன்றி.....கூல்.......

    ReplyDelete
  8. ஆம் சித்ரா பிசியான உங்களுக்காகவே........

    ReplyDelete
  9. தெய்வசுகந்தி... புத்துணர்வு பெற கட்டாயம் ஜீஸ் குடியுங்கள்.

    ReplyDelete
  10. வானம்பாடிகள் சார் 60 ரூபாய் ஆனாலும் 600 ரூபாய் ஆனாலும் வயித்துக்கு சாப்பிட்டுத்தானுங்களே ஆவோணும்.......அத்தோட பலகாரத்தை குறைச்சிப்புட்டு ஜீஸை குடிக்கத்தான் வேணும்.........சத்து வேணுமே....

    ReplyDelete
  11. தொடர்ந்து இந்த தொடரை படிக்கவில்லையென்று நினைக்கிறேன். பயனுள்ளதான பகிர்வு. நேத்துதான் ரொம்ப நாளைக்கப்பறம் இந்த அன்னாசிப்பழத்தை ஈஸ்வரன் கோவிலுக்கு பக்கத்தால வாங்கி சாப்பிட்டேன். அந்த இரவுநேர சிலிர் காற்றும் அன்னாசியும்.. அடடா.. இந்த இடுகையும்போல. (1 பிளேட் அன்னாசி 5 ரூபாய்தான்)

    ReplyDelete
  12. நல்ல உபயோகமான பகிர்வு :)

    ReplyDelete