Saturday, June 25, 2011

பாசம்!




















சுழன்று சுழன்று சூறைக் காற்றாய் சுற்றியடிக்கும் பாசம்!
நெருக்கி நெருக்கி திணறச் செய்யும் பாசம்!
நெருங்கி நெருங்கிச் செல்ல வழுக்கிச் செல்லும் பாசம்!
பிரித்து, பிரிந்து பேரிடர் செய்யும் பிரிய பாசம்!
பழித்து, கிழித்து இதயம் பிளக்கும் பாசம்!
சிரித்து, சிறைப் பிடித்து சித்தம் கலக்கும் பாசம்!
மறைத்து, மறைந்து மனதை மயக்கும் பாசம்!
கொடுத்து, பிடுங்கி கொடுமையாய் கும்மாளமிடும் பாசம்!
அடித்து, அணைத்து அசட்டையாய் அன்பு பொழியும் பாசம்!
நெருங்கினால், பிரிந்து, பிரிந்தால் நெருங்கி சாலம் காட்டும் மாயம்!
[அந்த பாசம்]

2 comments:

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...