Thursday, January 31, 2013

மின்னும் நட்சத்திரம்


பவள சங்கரி


ஏழு ஸ்வரங்களுக்குள் நீயும்
எட்டாத எட்டாம் ஸ்வரத்தில் நானும்.
உனக்குள்ளேயே தொலைந்து போனேன்


நீயில்லாத பொழுதுகளிலும்
என்னை மீண்டும் தொலைக்க உன்னைத்
தேடிக் கொண்டேயிருக்கிறேன்.

இருண்ட இரவில் நிலவின் ஒளியில்
இதயத்தினுள் ஊடுறுவி உறுத்தியது
நீயில்லாத தனிமை.

இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை
இது எப்போது ஆரம்பித்தது என்றும் புரியவில்லை.
ஆனால் மனதிற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

பருவமும், காலமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
எம் இதய வானில் மூடியிருக்கும் கருமேகங்களைக்
களைந்தெறிய நீ எம்மைத் தொடர்ந்து வருகிறாய்

நீ எனக்களித்த அத்துனை இன்பங்களையும்
உனக்கேத் திருப்பியளிக்க நான் விழைந்தாலும்
மேலும் மேலும் என்னையே கடன்காரனாக ஆக்குகிறாய்

எம் இருண்ட பகுதிகளைக் கடக்க
உம் தோளின்மீது சாய்ந்து துயர் துடைத்துக் கொள்கிறேன்
இருந்தும் நீ என்னிடம் இருப்பது போல  
ஆத்மார்த்தமாக என்னால் உன்னிடம் இருக்க முடியவில்லை.
காரணம் என் ஆத்மா என்னிடமில்லையே!

நன்றி: நிலாச்சாரல்

1 comment:

  1. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete