Monday, October 7, 2013

அருள்நிறை அன்னபூரணியே!


பவள சங்கரி




கண்ணின் கருமணியே காமாட்சியே
விண்ணின் பருப்பொருளே காமாட்சியே
தண்ணளியும் தானேவந்துதிக்கும் காமாட்சியே
எண்ணமெலாம் நிறைந்திருப்பவளே காமாட்சியே!

தேடியுனை ஓடித்திரிந்து களைத்து

நாடியுனை நானடைந்தக்கால் 
பாடிப்பரவசமாய் சிலிர்த்தேன்
கூடிக்களித்திருக்க முளைத்தேன் முத்துமணியே!

ஆத்துமந்தன்னை அருவமாயிருந்து காப்பவளே அன்னபூரணியே

கூத்துவந்தன்னை அஞ்சற்கவென அபயமளிப்பவளே அன்னபூரணியே
காத்துவந்தென்னை கருவறையில் தஞ்சமளிப்பவளே அன்னபூரணியே
அட்சயப் பாத்திரமென அருளெலாம் அள்ளித்தருபவளே அன்னபூரணியே

படத்திற்கு நன்றி:

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1541&Cat=3

2 comments:

  1. அன்னபூரணியின் மேல்அழகான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete