Thursday, December 31, 2015

இனிய புத்தாண்டே மலர்க!


பவள சங்கரி


புத்தாண்டு மலர்ந்தது!
வைகறை மலர்ந்த இன்பொழுதில்
கவினுறு காட்சிகளின் அணிவகுப்பு!
 மின்னும் நட்சத்திரம், மிதக்கும் மேகம்
குளிர்தென்றல், கொஞ்சும் புறாக்கள்,
எங்கும்  மனம்நிறை பேரமைதி, 
ஆழுலகொன்றின் முகட்டில் உறைதருணம்
 உளமறியாதொரு கணப் பொழுதில் 
 பசுமைக்களஞ்சியமாய் முளைத்தெழுந்த அன்பில்
கோட்டுப்பூவாம் கொன்றையிலுறையும்  கோபதியாய்
மறைகண்ட மங்கல மயோரனவன்
கறைக்கண்டன் கற்பகத்தருவானவன்
முயற்புல்லிற் பனித்துளியானவன்
மிறல்நகை கயற்கண்ணியின் சிற்றம்பலவன் 
சிறிபலம் நாடும் சுடலையாடியவன்
பற்பதமதில் பற்றாயர் கோலம்கொண்டவனவன்
பற்றாயமாய் சுபங்கரியின் மனத்திலுறைபவனவன்
சுப்பிரதீபம் நாடுவானவன்  தினம்! தினம்!
மலர்ந்த 2016  ஜெயம்! ஜெயம்!

1 comment:

  1. அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete