Saturday, August 2, 2014
Friday, August 1, 2014
கந்த சஷ்டிக் கவசம் பிறந்த கதை
பவள சங்கரி
முருகனின் புகழ் பாடும் பல நூறு பாடல்கள் இருப்பினும் இந்த கந்த சஷ்டிக் கவசம் மட்டும் மக்கள் மனதில் தனிப்பெரும் இடம் பிடித்துள்ளதும் உண்மையே..! இப்பாடலைப் பாடியவர் பாலதேவராய சுவாமிகள் .
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை எத்தகைய உணர்வுப்பூர்வமானது என்று பாருங்களேன்!. பாலதேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார், என்னென்னவோ சிகிச்சைகள் செய்தும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. வேதனை தாங்காத நிலையில், வாழ்க்கையே வெறுத்துப் போனதால் கடலில் விழுந்து உயிரையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்து திருச்செந்தூருக்கு வந்து சேருகிறார்.
Thursday, July 31, 2014
Tuesday, July 29, 2014
ஆடிப்பூர நாயகியே!
பவள சங்கரி
ஆடிப்பூரத்தில் அங்கமெல்லாம் மின்னும் பொன்னாய்
ஆடிப்பாடி வருகிறாள் மின்னிடையாள் ஆனந்தமாய்
கொஞ்சுதமிழும் பஞ்சு மெல்லடியும் பாந்தமாய்
பொருந்திவர நஞ்சுண்ட கண்டனின் நாயகியாய்
அபயமளிக்கும் நற்றுணை வேதமே அன்னையாய்
பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்
நித்தமும் நின்னை நினைந்துருகும் வரமருள்வாய்
வாரணாம்பிகையே! வாயுதேவியே! வாகீசநாயகியே!
போற்றி போற்றி!! அன்னையே அகிலாண்டநாயகியே!!
அஞ்சேலெனும் மந்திரமருளும் மாதவச் செல்வியே!!
வணங்குகிறேன் நிதம் நின்னையே! எனதன்னையே!!
நன்றி : வல்லமை
Friday, July 25, 2014
Tuesday, July 22, 2014
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்
பவள சங்கரி
மூலவர் : முத்து மாரியம்மன், துர்க்கை
தல விருட்சம் : வேம்பு மரம்
தீர்த்தம் : வெல்லகுளம்
பழமை : 500 ஆண்டுகள்
புராணப் பெயர் : புன்னைவனம்
ஊர் : புன்னைநல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
தல சிறப்பு : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார்.
தல வரலாறு : நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.
Monday, July 21, 2014
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...