Monday, October 4, 2010

அதிர்ச்சி வைத்தியம்.......

ஷோபனா, அமெரிக்கா கிளம்புவதற்கு பேக்கிங் பண்ண ஆரம்பித்து விட்டாள். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. முப்பது நாட்கள் ஓடிவிட்டது.........

ஒரு வருடம் முழுவதும் அடக்கி வைத்திருந்த பாசம், மடை திறந்த வெள்ளம் போல, பொங்கிவர, முப்பது நாட்களும் முப்பது நொடியென சிட்டாய்ப் பறந்து விட்டது. மனம் மட்டும், பரபரப்பாக, செய்வதொன்றும் அறியாது, பரிதவித்துப் போகிறது. மகளையும், குழந்தைகளையும் பிரிய வேண்டுமே என்று நினைக்கும் போதே, அடிவயிற்றில் சிலீரென ஒரு உணர்வு. ஆனாலும் வேறு வழியில்லையே...... அதற்கு மேல் விடுமுறை இல்லை, விசா பிரச்சனை, குடியுரிமை..........இப்படி ஏதேதோ காரணங்கள் மட்டும், பதிலாகக் கிடைக்கும்.

" அம்மா, இதென்ன எல்லா சாமான்களையும் பேக்கிங் பெட்டியோடயே வைக்கிறீங்க? அதுவே பாதி இடத்தை அடைச்சிக்கும். அது மட்டுமில்லாம இருபது கிலோ வெயிட்தான் அலௌட், தெரியுமில்ல. எல்லா பேக்கிங்கையும் பிரிச்சு வையுங்கம்மா.....", என்றாள்.

" ஷோபி, என்னம்மா குழந்தையோட விளையாட்டுச் சாமானையெல்லாம் வெளியே எடுத்து வைக்கிறே?".

" என்னம்மா, பெட்டி முழுக்க டாய்ஸ் மட்டுமே வைக்க முடியுமா? வேணுங்கற டாய்ஸ் அங்கேயே நிறைய வாங்கி வெச்சிருக்கேன். அங்க ஈசியா கிடைக்காத பொருளை மட்டும் தான் வைக்கணும். அடுத்த முறை வரும்போது, பாத்துக்கலாம்".

" அடுத்த முறை வரும் போது குழந்தை பெரியவனாயிட்டா, இதையெல்லாம் சீந்த மாட்டானே?"

" அதுக்கென்ன பண்ண முடியும்? நீங்க வாங்கும்போதே அதை யோசிச்சிருக்கணும்".

" ஏம்மா அடுத்த முறை நீ வர்றதுக்குள்ள நம்ம பப்பு எங்களையெல்லாம் மறந்திடுவானில்ல? திரும்ப புதுசா பார்க்கிற மாதிரி பார்ப்பான் இல்ல?".

" அதெப்படிம்மா, நாமதான் அடிக்கடி, சாட்டிங் பண்ணறோம், வெப் கேமரா மூலம் பார்த்துக்கறோம், நினைச்சா போன்ல பேசறோம்".

" இருந்தாலும்...........".

" மம்மி.........நோ செண்டிமெண்ட்ஸ்...............கொஞ்சம் பிராக்டிகலா இருங்க. ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணாதீங்க", என்றாள், கடுமையாக. மறு வினாடி மாலதியின் முகம், வாடிய மலராக துவண்டுவிட்டது.

ஆனால் ஷோபாவோ எந்த பிரதிபலிப்பும் இல்லாமல், " பரத் கிளம்புங்க, ஷாப்பிங் போகலாம்", என்று கிளம்பி விட்டாள்.

காரில் ஏறிய மறு வினாடி, அடக்க முடியாதவளாக குலுங்கிக், குலுங்கி அழ ஆரம்பித்தாள் ஷோபனா.

" ஏய் ஷோபி, என்னது இது, ஏன் இப்படி அழறே........" என்றான் பரத் ஒன்றும் புரியாமல்.

" மம்மிகிட்ட ரொம்ப கடுமையா பேசியது, மனதுக்கு ரொம்ப பாரமா இருக்கு பரத்", என்றாள் விசும்பலுடன்.

" பின்னே, எனக்கே நீ பேசியது ரொம்ப சங்கடமா இருந்திச்சு, நீ ஏன் அப்படி பேசினே?", என்றான்.

" மம்மிக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கத்தான் .............. இல்லேன்னா, நாம கிளம்பறத நெனச்சி அவங்க அழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா, என்னால தாங்க முடியாது............ நாம ஊருக்கு கிளம்பற நேரத்துல ரொம்ப வேதனைப்பட்டு, உடம்பை கெடுத்துக்குவாங்க........ அதைக் கண்ட்ரோல் பண்ணத்தான் அப்படி பேசினேன் ", என்றாள் அழுகையினூடே.

" ஏய், மாலதி, அவதான் அவ்வளவு திமிறா பேசிட்டுப் போறாளே, நீ ஏன் வீணா அழுதுக்கிட்டிருக்கே?".

" இல்லைங்க, ஏதோ டென்சன்ல பேசிட்டா, ஊருக்குப் போயும் அதை நினைச்சி, நினைச்சி வருத்தப்படுவாளே, அதைத்தாங்க என்னால தாங்க முடியல", என்றாள்..............

23 comments:

  1. பெத்த மனமோ,பிள்ளை மனமோ பாசம் கொண்ட மனங்கள் எல்லாம் பித்துதான்.... !

    நல்லாயிருக்குங்க!

    ReplyDelete
  2. நன்றி சார். நன்றாகச் சொன்னீர்கள் . அனுபவ முத்துக்கள்.......

    ReplyDelete
  3. இது ஏற்கனவே இதழில் வெளி வந்த கதையா ??

    ReplyDelete
  4. நன்றிங்க எல்.கே. ஆமாங்க. இந்த மாத இதழில் பிரசுரமாகியுள்ளது.

    ReplyDelete
  5. நன்றிங்க பழமைபேசி.

    ReplyDelete
  6. தாய்க்கு தெரியாத பிள்ளையின் மனசு.அருமை.

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா இருக்குங்க கதை! முடிவா சொன்னீங்களே அது ரொம்ப ரொம்ப நிஜம்.

    ReplyDelete
  8. நன்றிங்க ராமலஷ்மி.......ஆமாங்க......என்ன சொல்றது.......

    ReplyDelete
  9. மிக நல்ல பதிவு.


    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  10. நல்ல கதை.

    இந்த பிரச்சனையெல்லாம் வேண்டாம்னு தான் வெளிநாடே போகாம இருக்கோம்:))

    நினைச்ச நேரத்துக்கு இருவரின் பெற்றோர்களைப் பார்க்கப் போகலாம். அவர்கள் இங்கே வரலாம்:)

    ReplyDelete
  11. நன்றிங்க டெனிம்மோகன்.

    ReplyDelete
  12. அதுதான் வித்யா...........பணமா.....பாசமான்னா, பாசம்தான்னு சொல்ற வித்யா.......

    ReplyDelete
  13. விழிகளை நனைக்க வைத்த பதிவு.., அன்பு அப்படித்தான். மறைக்க முயன்றாலும் முடியாத மடை. நேசமிகு நெஞ்சங்களின் பாசம் புரிகிறது.ம்ம்ம்ம்... அருமையான பகிர்வு.

    ReplyDelete
  14. நன்றிங்க தமிழ்க் காதலரே.....உண்மைதாங்க....

    ReplyDelete
  15. பாசம் சொல்லும் அனுபவம் தந்த கதைமாதிரி.அருமை.

    ReplyDelete
  16. நன்றிங்க நசரேயன்.

    ReplyDelete
  17. முதல்முறை வந்து பார்த்தால் அதிர்ச்சி.. ஆனால் கதையில் மட்டும் நெகிழ்ச்சி...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ம்ம்...பழசையெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க...

    கதை ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  19. நன்றிங்க தமிழரசி.

    ReplyDelete
  20. நன்றிங்க சுந்தரா.வருக.....வருக....

    ReplyDelete