Sunday, June 17, 2012

பாலையும் சோலையாகுமா?

IN& OUT CHENNAI MAGAZINE

அக்னிகுஞ்சு அடிவயிற்றில் எறிய
அடுப்பினிலோ பூனை தூங்க
உயரிய விளைச்சலால்
குவிந்து கிடக்கும் முத்துக்கள்

மக்கிப்போவதைக் கண்டு
மனம் பதைக்கும் நீதியரசர்கள்
எரியும் தீயை அணைக்க
இலவசமாய்த் தந்திட பரிந்துரை
வறுமைத்தீயும் ஒழிந்து
குளிர்ந்திடுமா வறியவரின் வயிறு!

பசுமைப் புரட்சியும்
வெண்மைப் புரட்சியும்
ஓங்கும் இந்நாளில்
வறட்சியும் வறுமையும் ஒழிந்து
பசிக்கொடுமை நீங்கி
பாலையில் வாழ்வோரின்
வயிற்றிலும் பால்வார்க்கப்படுமா?

தணலில் காயும் முதுமையும்
வளமையாகுமா வறுமை நீங்கி?
பெற்றபிளைகளால் கைவிடப்பட்ட
பெற்றோரைக் காக்க
சட்டம் போட்ட
அரசால் தீர்வு அளிக்க
முடியுமா முழுமையாக
தத்தெடுக்க முடியாதா தாயாக?

2 comments: