Tuesday, January 21, 2014

சிறுவர்களுக்கான நூல் - கதை கதையாம் காரணமாம்!



வணக்கம் நண்பர்களே!

பழனியப்பா பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மற்றுமொரு சிறார்களுக்கான நூல் இது. சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் வாங்கிப் பார்த்துச் சொல்லுங்கள். நன்றி.



    


கதைகள் என்பது நம்மைச் சுற்றி நடப்பவற்றிற்கு ஒரு சாளரமாக இருப்பது. குழந்தைகளுக்காக எழுதுவது என்பது நாமும் குழந்தையாக மாறி, அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து, அவர்களுக்காகப் பேசி, அவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது. அந்தக் கதையின் நாயகர்கள், கடவுளாகவோ, மனிதராகவோ, தேவராகவோ, முனிவராகவோ, பறவைகளாகவோ, மிருகங்களாகவோ அல்லது உயிரில்லாத சடப் பொருளாகவோ கூட இருக்கலாம்.

Sunday, January 19, 2014

நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!




பவள சங்கரி

ஸ்ரீநிதி.. ஸ்ரீநிதி...  என்ன காரியம் செய்திருக்கிறாய் நீஎத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியில் உறைக்கிறதே இல்லைநான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி கத்திட்டிருக்கேன். நீ கொஞ்சமாவது  சட்டை பண்றயாஇன்னும் என்ன சொல்லி உன்னை திருத்தறதுன்னு தெரியல.. கடவுளே

எதுக்கும்மா இப்படி தேவையில்லாம கூப்பாடு போடற நீ? இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி சீன் போடற. போம்மா, போய் வேற ஏதாவது வேலை இருந்தா போய்ப்பாரு

அடிப்பாவி. நான் இவ்ளோ சொல்லியும் நீ சர்வ சாதாரணமா கூப்பாடு போட்றேன்னு சொல்ற.. உன் மாமியார் வந்திருக்காங்க நினைப்பிருக்கா. இப்பகூட திருந்த மாட்டியா? அவிங்க கிராமத்துக்காரவிங்க. பாவம் நம்மளோட அதிநாகரீகமெல்லாம் அவிங்களுக்கு புரியாது. அதனால் அவிங்க ஊருக்குப் போற வரைக்குமாவது கொஞ்சம் நான் சொல்றத கேளும்மா ப்ளீஸ். அவிங்களுக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டாங்க. பிரச்சனையாயிடப் போவுது. கல்யாணம் ஆகி இன்னும் முழுசா மூனு மாசந்தான் ஆவுது. அதுக்குள்ள இப்படின்னா, அப்பறம் அவிங்க என்ன முடிவு எடுப்பாங்கன்னு சொல்லவே முடியாது

Saturday, January 18, 2014

காளியின் களிநடனம்!


பவள சங்கரி



உள்ளத்தை அளக்க ஆயிரம் வழிகள்
உள்ளதை விளக்க முடியாத மொழிகள்
கள்ளத்தைக் காட்டும் காவியங்கள்
காப்பியமாய் கனிந்தெழும் துயரங்கள்!

Friday, January 17, 2014

வள்ளி தனக்கே குறவர் மலையாட்சி!


பவள சங்கரி
2009 – 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு. விஜயா அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்
மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது அன்பில் உறைந்திருந்த போழ்தில் பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ள பாடல்:
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக்
குறவனெங்கள் வீட்டிற் கொண்ட
வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி
சீதனமா வழங்கி னாராற்
பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு
துணியிலையென் பிறகே வந்த
கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு
மெனக்குமிலை கங்சி தானே.
20
800px-PettaiNarikoravas

Monday, January 13, 2014

திரை கடலோடி.....





பவள சங்கரி


”இதுக்கு மேல தாக்குப் புடிக்க முடியாது சாமீ.. உடம்பெல்லாம் ரணமா போச்சி..  ஒரு வா சோறுகூட ஒழுங்கா திங்க முடியலப்பா. வாயு, வவுரெல்லாம் புண்ணா நொந்து போச்சு சாமீ.  டாக்டரு கண்டமேனிக்கு வையுறாரு. இனிமேல்பட்டு மேசன் வேலைக்கு போவக்கூடாதாம். அப்புடி ஒரு வியாதியாம் எனக்கு. அதுக்கும் மீறி போனா அப்புடியே போய் சாவு, என்னாண்ட திரும்பி வராதேங்கறாரு. எனக்கு மட்டும் என்ன அந்த கல்லு, மண்ணுல ஓயாம வேல செஞ்சி  எப்பப் பார்த்தாலும்  இருமலோட  திரியணும்னு ஆசையா? பாக்கறவனெல்லாம், பரிதாபமா ஏண்டா இன்னும் வேலைக்கு வறேன்னு கேக்கறானுவ..  இருமல் நிக்காம வருது. அப்பப்ப சளியோட ரத்தமும் வருதுல்ல, அதான் பய புள்ளைக பயந்து போவுதுக. நாளமின்னிக்கி இங்க வந்து உழுந்து கிடந்தா உன்னய எவன் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டுப் போறதுன்னு மேஸ்திரி கண்டபடிக்கு திட்டறான். இனிமே வேலைக்குப் போவ முடியாது. வேணுமின்னா வெளிய காய்கறி கடை போட்டு ஒக்காந்துக்கறன். அதுக்கு எதாச்சும் ஏற்பாடு பண்ணுனா தேவலப்பா. மனசில இருக்குற தெம்பு உடம்புக்கு இல்லியே, நான் என்னத்ததான் செய்யட்டும். 10 வயசுல காரச்சட்டி தூக்குனவன், இந்த 40 வருசமா காரையில கிடந்து குடலெல்லாம் வெந்து கெடக்குது”

“இந்தா..  ஏன் இப்புடி புலம்பற. செத்த நிறுத்து. பையன் பாவம் இப்பத்தான் அலுத்துப்போய் ஊட்டுக்கு வந்திருக்கு. வந்ததும் உன் ராமாயணத்தை ஆரம்பிக்கிற. என்னா மனுசன்யா நீ? அது பாவம் காலைல 7 மணிக்கே தின்னும், திங்காம ஓடுச்சி. இப்ப மணி 8 ஆவுது. இன்னும் வவுத்துக்கு ஒன்னியும் திங்கக்கூட இல்ல..  எம்பட ராசா  அதும் மூஞ்சியைப் பாரு பாவம், செவனேன்னு எப்புடி கெடக்குன்னு, போ.. சாமி. போய் கைகால் கழுவிட்டு வா ராசா.. சோறு திங்கலாம்.. “

இனிய பொங்கல் வாழ்த்துகள்!



அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பர்களே!! எங்கும் மங்கலம் பொங்குக! 



உழவர் பெருமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!!



நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!! (அபிராமி அந்தாதி)





அன்புடன்
பவள சங்கரி

Saturday, January 11, 2014

சிதையா நெஞ்சு கொள்!


பவள சங்கரி
சென்ற புதன் கிழமை 08.01.2014 அன்று மாலை ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழாவும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கென மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தார்த்தா பள்ளி தன் 28 ஆண்டு கால கல்வி அனுபவத்தை இப்பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்கள் மூலமாக மிக அழகாகத் தொகுத்து மூன்று நூல்களாக வழங்கியுள்ளது.
bharathy 1

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...