Thursday, November 11, 2021

பாவாணர் - பன்னாட்டு கருத்தரங்கம்



மகளிர் கிறித்தவக் கல்லூரி, நாகர்கோயில், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை, தமெரிக்கா தொலைக்காட்சி, அமெரிக்கா ஆகியோர் இணைந்து நடத்தும், ‘பாவாணர் பைந்தமிழ் கொடை’ எனும் பொருண்மையிலான இந்த ஐந்து நாள் பன்னாட்டுப் பயிலரங்கின் 5ஆம் நாள் நிறைவு  நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் தங்கள் அனைவரையும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளைச் சார்பில் வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

நேற்றைய நான்காம் நாள் நிகழ்வில் தமிழ்ச்செம்மல் உயர்திரு பதுமனார் ஐயா அவர்களின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்ததும், மாணவச் செல்வங்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்த கருத்தரங்கின் காரணமாக இருக்கும் மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.எம் பத்மா அவர்களையும், தமெரிக்கா தொலைக்காட்சியின் நிறுவனர் திரு மகேஷ் நாட்டாண்மை அவர்களையும், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தொழில்நுட்ப உதவி அளித்து வரும் பேரா. ஜெசிந்த் ஜெயபாலன் அவர்களையும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் சிறப்பான பயிற்சி பெறும் வகையில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், ஆய்வு மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

 மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வல்லுநர் தேவநேயப் பாவாணர் இளம் பருவத்திலேயே தமது தாய் - தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். தமது தாய் வழி பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்தர், அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்று பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். “நேசன்” என்பதும் “கவி” என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் “தேவநேயப் பாவாணர்” என அமைத்துக்கொண்டார்.
சுருக்கமான சில தகவல்கள்
1. 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.

2 பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.

3.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணி யாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.

4. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

5 ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின்  தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

6. ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.

7. கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை உறுதிசெய்து காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

8. தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.

9. இவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.

10. அன்றைய முதல் எம்.ஜி.ஆர், அவருடைய இறுதிசடங்கில் கலந்துகொண்டார்.

நிறைவுரை

இதுவரை சிறப்பாக நடந்து முடிந்துள்ள இந்த 5 நாள் பயிலரங்கின் நிறைவு விழாவிற்கு வந்துள்ளோம். 


தமிழகத்தில் மட்டுமல்லாமல் எல்லை கடந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலும் தாய்மொழியாகியுள்ள நம் தமிழ் மொழி மிக விரிந்த எல்லை கடந்ததொரு தளம் அமைந்துள்ள மொழி.  பொ.ச.மு.500 துவக்கத்திலேயே தமிழ் எழுத்து வடிவப் பதிவைக் காண்கிறோம். ஆக, கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பல்வேறு ஆட்சி மாற்றங்கள், மத ஆதிக்கங்கள் என முரண்பட்ட  சூழல்களிலும் அறுந்துவிடாத தொடர் சங்கிலிகளாக நீண்டு வந்துள்ள மொழி வரலாற்றில் தனித்தன்மை வாய்க்கப்பெற்றுள்ள மொழி தமிழ்.

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் நம் நாட்டிற்கு வந்தபின்புதான் ஆங்கில மொழி அறிமுகம் பெற்றாலும் அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் 700க்கும் அதிகமான பாடசாலைகள் இருந்ததாக 1797ஆம் ஆண்டின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன குறிப்பேட்டின் மூலம் அறியமுடிகின்றது. 

 

1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வந்த பிறகு, இந்திய பாரம்பரிய கல்வி முறையை மாற்றி, ஆங்கில புத்தகங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப் பரிந்துரை செய்ததால், 1835-ம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு மெக்காலேவின் பரிந்துரைகளை ஏற்றார். இதையடுத்து மெக்காலே கல்விக்குழு உருவாக்கப்பட்டது.

1853-ல் சார்லஸ் உட் தலைமையில், பட்டப்படிப்புகளை ஆங்கில மொழியில் வழங்கவும்ல்கலைக்கழகங்கள் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்தார். இங்குதான் ஆங்கிலத்தின் ஆதிக்கம் ஆரம்பமாகிறது. காலனித்துவத்தின் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக பிரிட்டன் தனது மொழியைப் பயன்படுத்தினாலும்  இப்போது உலகெங்கிலும் உள்ள கலாச்சார ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவமாகப் பயன்படுத்துகிறது.

 

பல நாடுகள், முக்கியமாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகள், சுதந்திரத்திற்குப் பிறகும், காலனித்துவ சக்திகளின் மொழியை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஆதிக்கம், ஆங்கிலேயர்களால் காலனி ஆதிக்கமில்லாத நாடுகளை ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளத் தூண்டியதன் காரணம் இது சர்வதேச மொழி என்று கருதப்படுவதுதான். சீனா, பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான், பிரேசில், ரஷ்யா போன்று பல நாடுகள் தங்கள் தாய்மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருவதோடு உயர் கல்வியும் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதைக் காணமுடிகின்றது. அவர்களால் முடியும்போது நம்மால் ஏன் முடியாது என்று சிந்திக்கவேண்டும்.

உயர்கல்வியில் விரும்பி சேர்பவர்களில் 45 சதவீதம் மாணவர்களே படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இதற்கு புரிதல் இல்லாத மொழிவழிக் கற்பித்தலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உயர்கல்வி என்பது வாழ்வில் ஏற்படும் பரிணாம வளர்ச்சி என்பதை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்துகொண்டு அதற்கான முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். பாவேந்தர் பாரதிதாசன் சொல்வது போன்று 'அறிவை விரிவு செய்து அகண்டமாக்கவும் முயலவேண்டும். அறிவை அகண்டமாக்க உதவுவது மொழி. எத்துணை மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்.

தமிழ் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கும் வேளையில், ஆய்வுப் பொருட்களும் ஆவணங்களும், அதற்கான ஆதாரங்களும் தமிழ் மொழியில் தயாரிக்கப்படும் என்பதால் சொல்லகராதியும் வளங்களும் காலப்போக்கில் வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

இன்று, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக கணினித்துறையில், நாம் ஒரு சிறந்த நிலையில் இருக்கும் வகையில் தமிழ் மொழிக்கான வளங்கள் கிடைப்பதற்கும், பிற இடையூறுகளுக்கு தீர்வு காணவும் எளிதாக வழிவகுக்கும்.

மாணவர்கள்மிழ் மொழியில் விளக்கம் பெறும்போது அறிவியலின் சிக்கலான கருத்துகளைப் புரிந்துகொள்வது எளிது. ஆசிரியர்களுக்கு போதுமான தமிழ்மொழி அடிப்படையிலான கற்பித்தலும் வழிகாட்டுதல்களும் குறிப்புகளும், தொழில்நுட்பக் கல்விக்கான சொற்களஞ்சியம், மொழிபெயர்ப்புகள் பயிற்சி ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அதற்கான ஒரு சிறு முன்னெடுப்பு மட்டுமே இந்த பாவாணர் பைந்தமிழ் கொடை எனும்  5 நாள் பயிலரங்கம் என்று கூறலாம். மாணவர்கள் மேற்கொண்டு இந்தச் சொல்லாய்வுகளை மேற்கொண்டு கட்டமைத்துக்கொண்டு தங்கள் உயர் கல்விக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம் என்ற வகையில் இந்தப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்று மாணவர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்த சிறப்பான பயிலரங்கம் பரவலாகச் சென்று சேர்ந்ததற்கு காரணமாக உள்ள தெமெரிக்கா தொலைக்காட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு மகேஷ் நாட்டாண்மை அவர்கள் நியூ யார்க் Albany தமிழ் சங்கத்தில் இரண்டு வருடங்களாக தலைவராக இருந்தவர் . NRI என்கிற குறும்படத்தை எடுத்து எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தார்., தொழில் முனைவோர்களுக்கு பல ஆலோசனைகள் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், பல கல்லூரி மற்றும் பள்ளிகளில் தன்னம்பிக்கை பேச்சாளராக  மாணவர்களை ஈர்ப்பவர். அவருக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  கல்லூரி நிர்வாகத்தினருக்கும், மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி நிகழ்ச்சியை செம்மையாக நடத்திச் சென்றுள்ள அன்புச் சகோதரி முனைவர் தே.ஷீஜா மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ள அத்துணை பேராசிரியப் பெருமக்களுக்கும், தொழில்நுட்ப உதவியை சிறப்பாக வழங்கியுள்ள சகோதரர். பேரா. ஜெசிந்ந் அவர்களுக்கும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாக பணிவான நன்றியை உரித்தாக்குகிறோம். அனைத்திற்கும் மேலாக தமது பல்வேறு பணிகளுக்கு இடையிலும் இந்த பயிலரங்கை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ள எங்கள் அன்பு ஐயா, தமிழ்ச்செம்மல் பதுமனார் அவர்களுக்கு மீண்டும் பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

 

 

 

மொழிஞாயிறு என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் அவர்களின் ஆகச்சிறந்த தமிழ்ப்புலமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ்ச்செம்மல் பெருந்தகை மதிப்பிற்குரிய பதுமனார் ஐயா அவர்களின் பயிலரங்கம் மூலமாக பல ஐயங்கள் தெளிவுறப் பெற்றோம்.

1925-ல் சிறுவர் பாடல் திரட்டு எனும் பாவாணரின் முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம்  போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளவர் தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியும் உள்ளார். ஆங்கிலத்திலும் சிறப்பாக உரையாற்றக்கூடியவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றியவர் ஒரு தருணத்தில் பணியை இழந்து வறுமையில் உழன்ற  நேரத்திலும்கூட தமது மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின்  தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகவும் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
 கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை உறுதிசெய்து காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
 தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். அரசு மரியாதையுடன் நடத்தப்பட்ட இவருடைய இறுதிச் சடங்கில்
அன்றைய முதல்வர் திரு எம்.ஜி.ஆர், அவர்களும் கலந்துகொண்டார். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு தமிழ் ஆளுமையின் பெயரில் நடந்து கொண்டிருக்கும் இந்த கருத்தரங்கின்

காரணமாக இருக்கும் மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.எம் பத்மா அவர்களையும், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தொழில்நுட்ப உதவி – பேரா. ஜேசிந்த தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் சிறப்பான பயிற்சி பெறும் வகையில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், ஆய்வு மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

 

 

 

 

சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வல்லுநர் தேவநேயப் பாவாணர் இளம் பருவத்திலேயே தமது தாய் - தந்தையரை இழந்தார். ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்கு ஆளானார். தமது தாய் வழி பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்தர், அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்று பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூனியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். “நேசன்” என்பதும் “கவி” என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் “தேவநேயப் பாவாணர்” என அமைத்துக்கொண்டார்.

மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும்,

மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் சிறப்பான பயிற்சி பெறும் வகையில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், ஆய்வு மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

 

 

 

 

இந்நிகழ்வில் பயிலரங்கப் பயிற்சியாளராகப் பங்குபெற, தம்முடைய எண்ணற்றப் பணிகளுக்கிடையே, மாணவச் செல்வங்களாகிய தங்கள் அனைவரின் நலன் கருதி மிகுந்த கடமையுணர்வுடன் இந்த 5 நாள் பயிலரங்கில் பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டுள்ள சீர்மிகு தமிழறிஞர், உலகளாவிய தமிழியக்கத்தின் பொருளாளரும், சிறப்பான ஆசிரியருமான தமிழ்த்திரு பதுமனார் ஐயா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தாளாளர் உயர்திரு ஆபிரகாம் நெல்சன் ஆசிர் அவர்களையும், தலைமையுரை ஆற்றவுள்ள கல்லூரி முதல்வர் முனைவர் சி.எம். பத்மா அவர்களையும், வாழ்த்துரை வழங்க உள்ள தமெரிக்கா தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறுவனர் திரு மகேஷ் நாட்டாண்மை அவர்களையும், மகளிர் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கலா ஞானசெல்வம் அவர்களையும், ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்ச்சியின் ஆணி வேராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தே.ஷீஜா அவர்களையும், நன்றி உரையாளர்கள், முனை. பாப்பா, முனை.ஜெயா எஸ்கலின், முனை. சங்கீதா, முனை.ஜெஸ்லின் நிமா ஆகியோர்களையும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். இந்நிகழ்வில் தங்கள் அறிவுக்கண் திறக்க வேண்டியும், தூய தமிழில் எழுதவும், பேசவும் சிறப்பாக பயிற்சி பெறவும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கும் அத்துணை மாணவச் செல்வங்களையும், இதற்கு உறுதுணையாக இருக்கும் அத்துணை பேராசிரியப் பெருமக்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

 

''வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கையின் குறிக்கோள்'' என்ற கொள்கையைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் பாவாணர்.

ஒருமுறை ஒரு அறிஞர் பெருமகனார் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் மிதிவண்டியில் வந்த ஒருவர் அவரை கவனிக்காமல் அவர்மீது மோதிவிட்டார். உடனே வருந்தி பதற்றத்துடன் ''அய்யா மன்னித்துக்கொள்ளுங்கள்... தெரியாமல் மோதிவிட்டேன்'' என்கிறார். இதைக்கேட்ட அந்த அறிஞர் கடும் கோபம் கொள்கிறார். மோதியவருக்கு ஆச்சரியம். ஆனால் அவரோ தமக்கு அடிபட்டதையும் மறந்துவிட்டு, ''மன்னிப்பு என்பது உருதுச் சொல். பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதே சரியான தமிழ்ச் சொல்'' என்றிருக்கிறார். இப்படிச் சாதாரண பேச்சில்கூட, ஒரு சிக்கலான தருணத்தில்கூட தூய தமிழ் மொழியை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்ற உறுதி கொண்டிருந்தவர் அவர், வேறு யாருமல்ல, இன்றைய நம் பயிலரங்க நிகழ்வின் நாயகர் தனித்தமிழ் இயக்கத்துக்கு வேராக நின்று தமிழை வளர்த்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்தான்.

'மாந்தன் பிறந்தது மறைந்த குமரிக்கண்டம், அவன் பேசிய மொழி தமிழே, தமிழே உலக முதன்மொழி, தமிழே திராவிடத்துக்குத் தாய், தமிழே ஆரியத்துக்கு மூலம்' என்று சூளுரைத்த பாவாணர், 'நேசன்' என்பதும் 'கவி' என்பதும் வடமொழிச் சொற்கள் என்பதை அறிந்துகொண்டவர் தமது இயற்பெயரான தேவநேசன் என்பது தூய தமிழ் பெயராக இல்லை என்பதால் தேவநேயப் பாவாணர் என்று மாற்றிக்கொண்டார்.

தேவநேயப் பாவாணர், ஆம்பூரில் பள்ளிப் படிப்பை முடித்தர் பின்னர் நெல்லை பாளையங்கோட்டை திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டுத் தமிழாசிரியராகச் சீயோன்மலையிலும், ஆம்பூரிலும் பணியாற்றினார். உதவித் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

1968-ல் திருச்சி மாநகரில் பாவாணர், 'உலகத் தமிழ்க் கழகம்' என்ற கழகத்தை ஆரம்பித்தார். இவற்றின் மூலமாக 4 மாநில மாநாடுகளையும் நடத்தினார். 'முதல் தாய்மொழி', 'திராவிடத்தாய்', 'தமிழ் வரலாறு', 'தமிழர் வரலாறு', 'பண்டைய தமிழர் நாகரிகமும் பண்பாடும்', 'இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்', 'தமிழ்நாட்டு விளையாட்டு', 'பழந்தமிழாட்சி' போன்ற  நூல்களையும், 'திருக்குறள் தமிழ் மரபுரை' என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதி உள்ளார்.  43-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இதில் 4 ஆங்கில நூல்களும் அடங்கும்.

1955-ல் சேலம் தமிழ்ப் பேரவை 'திராவிட மொழிநூல் ஞாயிறு' என்ற பட்டமும், 1964-ல் மதுரை தமிழ்க் காப்புக் கழகம் 'பெருங்காவலர்' பட்டமும் வழங்கின. 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தையும் பெற்றார்.

1981-ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதில் 'மாந்தன் தோற்றமும்... தமிழர் மரபும்' என்ற தலைப்பில், சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாகச் சொற்பொழிவாற்றினார்.

பாவாணர் பணியிலிருந்த காலத்திலும் ஓய்வுபெற்ற நிலையிலும் பொதுவாக இரவு 12.00 மணிவரை தமது ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பாராம். காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாராம். அத்துடன் பிறர் தமது காலில் விழுவதை, பாவாணர் ஒருபோதும் விரும்ப மாட்டாராம். காரணம் ''மாந்தன், இன்னொரு மாந்தன் காலில் விழுவது தன்மானக் கேடு'' என்பாராம்.

பாவாணர் ஆங்கில மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்தபோதிலும், எப்போதும் தமிழ் மொழியிலேயே பேச விரும்புவார். குறிப்பாகத் தனித்தமிழில்தான் பேசுவாராம். தமிழ் அறவே தெரியாதவரிடம்தான் ஆங்கிலத்தில் பேசுவார். ஓய்வெடுக்க விரும்பினால் கூட அந்த நேரத்திலும் அகராதிகளையும் கலைக்களஞ்சியத்தையும் புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பாராம்.

பாவாணர், அகரமுதலிகளைத் தொகுப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். வளர்ந்துகொண்டே இருந்த அப்பணியை தமது  இறுதி மூச்சு வரை போராடி அத்தொகுப்பை முடித்துள்ளார். வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்த பாவாணரின் தமிழ்ப்பணியைத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் நினைந்து, அவர்தம் வழியில் சென்று தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்ப்பதுடன், அதனைக் காப்பதும் அனைவரின் கடமை என்ற வகையில் நாம் இந்த பயிலரங்கத்தில் இணைந்திருக்கிறோம். மாணவச் செல்வங்கள் முதுபெரும் தமிழ் அறிஞரும், சிறப்பு வாய்ந்த ஆசிரியரும், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான நம் பதுமனார் ஐயா அவர்களின் அருமையான பொழிவைச் செவிமடுத்து, தேவையான இடங்களில் குறிப்பெடுத்துக் கொண்டும் இந்த அருமையானதொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment